தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு
Read Time:57 Second
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினரும் மண்முனை மேற்குப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான விளாவெட்டுவானைச் சேர்ந்த இரண்டு பிள்ளையின் தந்தையான சங்கிலி என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் பரமேஸ்வரன்(37 வயது) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
விளாவெட்டுவானில் உள்ள சவற்சாலைப் பகுதியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையிலேயே அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வவுணதீவுப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating