சவூதி ரியாத் நகர வீதியில் கிடந்த, இலங்கையர் சடலம்!
சவூதி ரியாத் நகர பிரதான வீதி அருகில் இலங்கையர் ஒருவரின் சடலத்தை அந்நாட்டுப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அவர் வாகன விபத்தில் இறந்ததாக அறியப்படுகிறது.
சவூதி ரியாத் நகரின் பய்சாலியா ஹோட்டலில் கணக்கு பரிசோதகராக பணிபுரிந்த மாத்தளை அக்குறனை பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சாகிர் என்பரே இவ்வாறு இறந்துள்ளார்.
தினமும் ஹோட்டலில் பணிபுரிந்து விட்டு தனது வதிவிடத்துக்கு மோட்டார் சைக்கிளிளேயே செல்வார்.
இவ்வாறு கடந்த 27 ம் திகதி இரவு 11 மணியளவில் செல்லும்போது வாகனமொன்று அவரை மோதியுள்ளது. விபத்தில் பலத்த காயமுற்ற அவர் அவ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார்;.
அவ்விடத்துக்கு வந்த சவூதி பொலிஸார் இவரை பரிசோதனை செய்தபோது அவரது தொலைபேசியை கண்டெடுத்தனர்.
அதனுடாகவே இவர் இலங்கையர் என்று கண்டறியப்பட்டது. அவரை மோதிச் சென்ற வாகனம் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Average Rating