தனது காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கடலில் தள்ளிக் கொன்ற தாய்

Read Time:2 Minute, 15 Second

025காதல் வாழ்க்கைக்கு தனது பச்சிளங் குழந்தை இடையூறாக இருப்பதாகக் கருதிய தாயொருவர் மகளை தள்ளுவண்டி சகிதம் கடலில் தள்ளிய விபரீத சம்பவம் பிரான்ஸின் பாரிஸ் நகரில் இடம்பெற்றுள்ளது.

செனகலை பிறப்பிடமாகக் கொண்ட பபியன்னி கபோயு, (36 வயது) என்ற மேற்படி தாய் தனது 15 மாத மகளான அடெலெயிட்டை கடற்கரைக்கு தள்ளுவண்டியில் தள்ளி வந்து நிதானமாக ஆங்கிலக் கால்வாயினுள் தள்ளும் காட்சி ‘சிசிரிவி’ கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

கடந்த நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்ற இந்த கொடூர படுகொலை தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

இந்நிலையில் மறுநாள் மேற்படி பாலகியின் சடலம் தள்ளுவண்டியில் சிக்கிய நிலையில் கடலில் மிதந்தந்துள்ளது.

இதனையடுத்து அந்த பாலகியின் பெற்றோரைத் தேடி நாடளாவிய ரீதியில் 10 நாட்கள் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மரபணு பரிசோதனைகளின் பிரகாரம் அந்தப் பாலகியின் தாயார் பாரிஸ் நகரில் 63 வயது நபரொருவருடன் வசித்து வந்த பபியன்னி கபோயு என அடையாளம் காணப்பட்டார். அதைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை பொலிஸார் குறித்த தாயை பொலிஸார் கைது செய்தனர்.

இது தொடர்பில் குழந்தையின் தாயும் தத்துவவியல் துறை மாணவியுமான பபியன்னி பொலிஸாருக்கு தெரிவிக்கையில், அடெலெயிட்டின் தந்தையுடனான காதல் வாழ்க்கைக்கு தனது குழந்தையான அந்தப் பாலகி தடையாக இருப்பதாக உணர்ந்தே அவளைக் கொல்ல முடிவெடுத்ததாகத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சவூதி ரியாத் நகர வீதியில் கிடந்த, இலங்கையர் சடலம்!
Next post திருமணம் ஆன நடிகருடன் காதல் கிசு கிசு நூடுல்ஸ் ஆனார் நஸ்ரியா