திருமணம் ஆன நடிகருடன் காதல் கிசு கிசு நூடுல்ஸ் ஆனார் நஸ்ரியா

Read Time:3 Minute, 12 Second

027அடிக்கடி வம்பில் சிக்கும் நஸ்ரியா நாசிம், தற்போது திருமணம் ஆன நடிகருடன் இணைத்து கிசு கிசுக்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நஸ்ரியா நாசிம். மல்லுவுட் ஹீரோயினான இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து நய்யாண்டி, ராஜா ராணி, திருமணம் எனும் நிக்ஹா, நீ நல்லா வருவேடா, வாய் மூடி பேசவும் என வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆனார். இது மற்ற ஹீரோயின்களுக்கு ஷாக் ஆக அமைந்தது.

இந்நிலையில் நய்யாண்டி படத்தில் தன்னைப் போலவே டூப் நடிகையை வைத்து ஆபாச காட்சிகளை இயக்குனர் சற்குணம் படமாக்கிவிட்டார் என்று நஸ்ரியா குற்றம் சாட்டியதுடன் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார். இதையடுத்து பரபரப்பு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு அக்காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்த சமயத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சில ஹீரோயின்கள் நஸ்ரியாவின் போக்கு குறித்து விமர்சித்தனர். இயக்குனர் சொல்வதுபோல் நடிக்காதது தவறு என்று பகிரங்கமாகவே நயன்தாரா குற்றம் சுமத்தினார். அதற்கு நஸ்ரியா கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையில் திருமணம் எனும் நிக்ஹா படத்தில் நடித்து வந்த நஸ்ரியாவுக்கு அப்பட ஹீரோ ஜெய்யுடன் காதல் என்று கிசுகிசு பரவியது. இதை ஜெய் மறுத்தார்.

இதற்கிடையில் ஜீவாவுடன் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து நஸ்ரியா நீக்கபட்டார் என்று தகவல் பரவியது.

ஆனால் ஜீவா அதை மறுத்ததுடன் நஸ்ரியா தனது படத்தில் நடிப்பதாக தெரிவித்தார். பிரச்னை ஓய்ந்தது என்று நஸ்ரியா நிம்மதி பெருமூச்சுவிட்டார். ஆனால் அதற்குள் அடுத்த பிரச்னையில் சிக்கி இருக்கிறார்.

மம்மூட்டி மகன் துல்கர் சல்மான் ஜோடியாக வாய் மூடி பேசவும் படத்தில் நஸ்ரியா நடிக்கிறார்.

இப்படத்தில் துல்கர் மற்றும் நஸ்ரியாவுக்கு கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி காட்சிகளில் ஒன்றி நடிப்பதாக வும் நடிப்பையும் மீறி இருவருக்கும் காதல் மலர்ந்திருப்பதாகவும் புது கிசுகிசு கிளம்பி இருக்கிறது.

இதை கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆகி இருக்கும் நஸ்ரியா, யார்தான¢ இப்படி கிளப்பிவிடுறாங்களோ என புலம்புகிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை கடலில் தள்ளிக் கொன்ற தாய்
Next post வவுனியா வயோதிப பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கி ரவைகள்