வவுனியா வயோதிப பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கி ரவைகள்

Read Time:1 Minute, 57 Second

questவவுனியா பஸ் நிலையத்தில் இருந்து கண்டிக்கு புறப்பட தயாரான வயோதிப் பெண்ணின் பயணப்பைக்குள் துப்பாக்கியின் ரவைகள் காணப்பட்ட நிலையில் அவற்றை வவுனியா பொலிஸில் ஒப்படைத்த சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கண்டி செல்வதற்காக முல்லைத்தீவு முள்ளியவளை 3ஆம் வட்டாரத்தில் இருந்து வவுனியா வந்தடைந்த வயோதிப பெண்ணொருவர் வவுனியா பஸ் நிலையத்தில் இருந்த பொது மலசல கூடத்திற்கு செல்வதற்காக தனது பயணப்பையை ஓரிடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.

மீண்டும் தனது பயணத்தை தொடர்வதற்காக கண்டிக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி தனது தேவையின் பொருட்டு பயணப்பையை திறந்தபோது அவற்றில் துப்பாக்கி ரவைகள் உள்ளதை அவதானித்துள்ளார்.

உடனடியாக பஸ் சாரதியிடம் விடயத்தை கூற அவர் அவ் வயோதிப் பெண்ணையும் அழைத்துக்கொண்டு வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸாரிடம் விடயத்தை கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் இச் சம்பவம் தொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் மேற்படி ரவைகள் மைக்கேரா பிஸ்டலுக்கு பயன்படுத்தும் ரவைகள் எனவும் 18 ரவைகள் காணப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இவ் வயோதிப் பெண்ணின் பயணப்பையில யார் இதனை வைத்தனர் என்பது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணம் ஆன நடிகருடன் காதல் கிசு கிசு நூடுல்ஸ் ஆனார் நஸ்ரியா
Next post ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்