மாணவன் ஒருவன் பாலியல் துஷ்பிரயோகம்: தொண்டர் ஆசிரியர் கைது

Read Time:1 Minute, 15 Second

child.abuseமாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தொண்டர் ஆசிரியர் ஒருவர் மாரவில பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டம் மாரவில பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடொன்றையடுத்து இப்பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் தொண்டர் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த பிரஸ்தாப நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மாரவில நீதிவான் தம்மிக்க இலங்கசிங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பாடசாலையில் மட்டுமன்றி மாலை வேளையில் இயங்கும் பிரத்தியேக வகுப்பிலும் இம்மாணவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினி மகளுக்கு அதிர்ச்சி தந்த பிரியா ஆனந்த்
Next post மட்டக்களப்பில் உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு