மனைவியை குத்திக் கொன்ற கணவன் கைது
Read Time:1 Minute, 8 Second
தனது மனைவியை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் – விஜயபுர அஹய வீதியில் வசித்து வரும் 34 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் நேற்று பகல்வேளையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வாய்ச் சண்டை அதிகரித்துச் சென்று சந்தேகநபர் தனது மனைவியின் நெஞ்சுப் பகுதி மற்றும் வயிற்றுப் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் அப் பெண்ணின் 38 வயதான கணவன் இன்று (02) கைது செய்யப்பட்டுள்ளார்.
Average Rating