குடும்பத்துடன் வெளிநாடு செல்கிறார் அஜீத்

Read Time:1 Minute, 56 Second

ajithசினிமாவுக்கு இணையாக குடும்பத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் அஜீத். அதிலும், படப்பிடிப்புக்கு போக மீதமுள்ள நேரங்களை குடும்பத்தினருடன் மட்டுமே செலவு செய்வார்.

தான் நடிக்கும் படப்பிடிப்புகளுக்கு சில சமயங்களில் தனது வீட்டில் இருந்து விதவிதமாக சமைத்து கொண்டு வந்து யூனிட் நபர்களுக்கு விருந்து கொடுப்பது போன்று, தனது வீட்டு உறுப்பினர்களுக்கும் அவ்வப்போது ஏதாவது ஸ்பெசலாக சமைத்துக்கொடுத்து அசத்துவதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்.

அதுமட்டுமின்றி தான் ஒரு படத்தில் நடித்து முடித்ததும் தனது குடும்பத்துடன் ஏதாவது வெளிநாடுகளுக்கு சென்று ஒரு மாதமாவது டூர் சென்று வருவதை வழக்கமாகக்கொண்டிருக்கும் அஜீத்,

இப்போது வீரம் படப்பிடிப்பு முடிந்து விட்டதால், டிசம்பர் 10ந்-தேதி வெளிநாடு சுற்றுப்பயணம் செல்கிறாராம்.

அதோடு, ஆரம்பம் படத்தின் சண்டை காட்சியில் நடித்தபோது காலில் ஏற்பட்ட விபத்தினைத் தொடர்ந்து வீரம் படத்தில் நடித்து முடித்து விட்ட அஜீத், காலில் அறுவை சிக்சை செய்து கொள்ளவிருப்பதாக சமீபத்தில் செய்தி பரவியது.

ஆனால் இப்போது கௌதம்மேனன் படத்தை முடித்த பிறகு அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐயோ ஐங்கரநேசா… அரசியலுக்குப் புது நேசா… – வடபுலத்தான்
Next post பெண்ணின் வயிற்றில் கையுறையை வைத்து தைத்தனுப்பிய இங்கிலாந்து டாக்டர்கள்