கொழும்பில் மனித வெடிகுண்டு தாக்குதல் பீதி!
கடல் புலிகள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து கொழும்பு நகருக்குள் விடுதலைப் புலிகள் ஊடுறுவியிருக்கலாம் என்று கொழும்பு நகரில் பீதி ஏற்பட்டுள்ளது. மேலும் மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடக்கலாம் என்ற அச்ச¬ம் ஏற்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினருக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் கடற்படைப் பிரிவுக்கும் இடையே நடந்த கடும் மோதலில் இரு தரப்பிலும் 40க்கும் மேற்பட்டோர் பலியாயினர். இந்தத் தாக்குதல் எதிரொலியாக விடுதலைப் புலிகள் கடும் பதிலடி கொடுக்கத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கொழும்பு நகருக்குள் விடுதலைப் புலிகளின் தற்கொலைப் பிரிவினர் ஊடுறுவியிருக்கலாம் என்ற அச்சம் கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கொழும்பு நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் பதிலடி கடுமையாக இருக்க்க கூடும் என்ற அச்சம் மக்களிடையே நிலவுவதால் பொது இடங்களில் அதிகபட்ச பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.