இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று, ஆண் வேடமிட்டு மறைந்திருந்த இரு பெண்கள் கைது
Read Time:1 Minute, 17 Second
இராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற இரு இராணுவ வீராங்கனைகள் ஆண் வேடமிட்டு வீடொன்றில் தங்கியிருந்தபோது இமதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இமதுவ பிரதேசத்திலுள்ள வீடொன்றில் இவர்கள் வசித்து வந்த நிலையில் கைது செய்யப்படும்வரை, ஆண் வேமிட்டு, ஆண்களைப் போல் கூலிவேலை செய்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கோதொகொட மற்றும் திக்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இப்பெண்கள், பெண்கள் மாத்திரம் தங்கியிருக்கும் வீடொன்றைத் தெரிவு செய்து, அறையொன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த இரு பெண்களையும மேலதி விசாரணகளுக்காக அஹங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இமதுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்
Average Rating