சொகுசு வாகனத்தில் வந்து புறாக்களை திருடிய நபர்
Read Time:1 Minute, 17 Second
சொகுசு வாகனமொன்றில் வந்து கம்பஹா மாவட்டம் கந்தான பிரதேசத்தில் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான புறாக்களை திருடிய குற்றச்சாட்டில் நபரொருவரை கந்தான பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சந்தேகநபர், புறாக்களை வளர்க்கும் வீடொன்றுக்கு வந்து புறாக்கூடுகளை பார்வையிட்டு விலையையும் கேட்டறிந்து சென்றதாகவும் மறுதினம் இரவு சொகுசு வாகனத்தில் வந்து புறாக்களை கூட்டுடன் திருடிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இவருடன் புறாக்களைத் திருட வந்த மற்றொரு நபரொருவர் அப்பிரதேசத்தை விட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சந்தேக நபரை பொலிஸார் வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது அவரை இன்றுவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Average Rating