யாழ். மீசாலை மத்திய கல்லூரி மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்
Read Time:1 Minute, 2 Second
யாழ். மீசாலை மத்தியக் கல்லூரியின் கட்டடங்கள் அடையாளங் காணப்படாத சிலரால் தாக்கப்பட்டு, சேதம் விளைவிக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கல்லூரியின் பின்வழியாக நுழைந்த குழுவொன்று, இரவுநேர காவலாளியை தாக்கியதுடன், அதிபரின் அலுவலகத்திற்கு சேதம் விளைவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் காயமடைந்த காவலாளி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீசாலை மத்திய கல்லூரியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Average Rating