ஆட்டை பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை

Read Time:2 Minute, 34 Second

024ஆடொன்றை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 28 வயது நப­ரொ­ரு­வ­ருக்கு 10 வருட சிறைத்­தண்­டனை விதித்து கென்ய நீதி­மன்­ற­ம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

கடந்த வாரம் இடம்­பெற்ற இந்த விநோத வழக்கு விசா­ரணை குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் செவ்­வாய்க்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

நீதி­மன்­றத்தில் கத­னா­ கிட்­சவோ கொனா என்ற மேற்­படி நபருடன் அவரால் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்ட ஆடும் நிறுத்­தப்­பட்­டது.

கதனா கிட்­சவோ கொனாவின் வீட்­டிற்கு அயலில் வசிப்­பவர் ஒரு­வ­ர், கடந்த நவம்பர் மாதம் 25 ஆம் திகதி சிறுநீர் கழிப்­ப­தற்­காக புதர் ஒன்­றுக்குள் சென்­ற­போது மர­மொன்றில் ஆடைகள் தொங்­கு­வதைக் கண்டு அது தொடர்பில் ஆராய்ந்­துள்ளார்.

இதன்­போது அவர் கொனா நிர்­வா­ண­மான நிலையில் தனது ஆட்டை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­து­வதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து ஆட்டின் உரி­மை­யா­ள­ரான அந்த அய­ல­வரும் ஏனைய கிரா­ம­வா­சி­களும் கொனாவை கையுங்கள­வு­மாகப் பிடித்து பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைத்­துள்­ளனர்.

இந்­நி­லையில் அந்த ஆட்டை பரி­சோ­தித்த மிருக வைத்­திய அதி­கா­ரி­யொ­ருவர், அது பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தப்­ பட்­டுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து குறிப்­பிட்ட ஆட்டை தான் பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­யதை ஒப்­புக் ­கொண்ட கொனா, தன்னை நம்பி விசேட தேவை­யுள்ள தனது மனைவி உள்­ளதால் தனக்கு மன்­னிப்­ப­ளிக்க கோரியிருந்தார்.

எனினும், வழக்கை விசாரித்த பெண் நீதிபதி முதோனி நஸிபி, அவருக்கு 10 வருட சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். மீசாலை மத்திய கல்லூரி மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல்
Next post (VIDEO) உதட்டை கடித்து துண்டாக்கிய பெண்