வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் கமலுக்கு, டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…
வடமாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி சிறிமேவன் மகேந்திரராஜா உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவு பிரதேசசபையின் தவிசாளர் தானியல் றெக்சியன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் தானியல் றெக்சியனுடைய மனைவி அனிதா மற்றும் வேலனையை சேர்ந்த சசிந்திரன் ஆகிய மூவரையும் ஊர்காவற்துறை நீதி மன்றத்தில் பொலிசார் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் முன்னிலையில் மூவரையும் ஆஜர் செய்த போது நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் இவர்களை ஆஜர் செய்த போது தானியல் றெக்சியனுடைய பிள்ளைகள் மூவர் உட்பட, பலர் நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடியிருந்தனர்.
Average Rating