இலங்கை நட்சத்திர ஓட்டலில் ராஜபக்சே மகனுடன் உல்லாசமாக இருந்த தமிழ் நடிகை யார்?

Read Time:2 Minute, 38 Second

032கோலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ‘பிசி’ நடிகையாக இருந்து பின்னர் பாலிவுட்டில் கூடாரம் போட்டு ஏகப்பட்ட இந்தி நடிகர்களுடன் ‘பிசின்’ போல ஒட்டிக் கொள்கிறார் என கிசுகிசுக்கப்பட்ட அந்த இளம் கதாநாயகி இந்தி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார்.

அந்த நடிகை இலங்கைக்கு போக கூடாது என பல்வேறு தமிழர் ஆதரவு இயக்க தலைவர்களும் கோலிவுட்டில் இருக்கும் சில தமிழ் உணர்வாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் ‘கடல் தாண்டி கலையைப் பரப்பச்’ சென்ற அந்த நடிகை, தலைநகர் கொழும்புவில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

அவரை சந்திக்க இலங்கையின் பிரபல தொழிலதிபர்கள் அந்த நட்சத்திர ஓட்டலுக்கு படையெடுக்க தொடங்கினர். அவர்களில் ஒரு பெரிய பார்ட்டியுடன் நமது நடிகை நெருக்கமாக இருந்த சி.டி. தற்போது ஒரு முக்கிய புள்ளியிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இதேபோல், தமிழர்களை கொன்று குவித்து, தமிழினத்தையே வேரோடு சாய்த்த இலங்கை அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேயுடனும் அவர் இடம்பெற்றுள்ள படங்கள் வெளிவர தயாராக உள்ளதாக இலங்கையில் உள்ள தமிழ் இணைய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திரைக்கடல் ஓடியும் திரவியம் தேட வேண்டியது தான். அதற்காக, தமிழின பகைவனின் மகனோடு சல்லாபித்து விட்டு வந்த அந்த இனத்துரோகி யார்? என்பது தான் கோலிவுட் வட்டாரத்தில் தற்போதைய ‘மில்லியன் டாலர்’ கேள்வியாக வலம் வருகிறது.

அந்த நடிகை இலங்கையை விட்டு வந்த பின்னும் ராஜபக்சே மகனின் சட்டைப் பையில் அந்த நடிகையின் புகைப்படம் தொட்டுத் தொட்டு உரசுவதாக சமூக வலைதளங்களில் இலங்கை தமிழர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாணசபை எதிர் கட்சி தலைவர் கமலுக்கு, டிசம்பர் 17 ஆம் திகதி வரை விளக்கமறியல்…
Next post இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்கள் தெற்கு விஜயம்