காதலருக்கு நாற்பது தையல்: கவலையில் மச்சான்ஸ் நடிகை
Read Time:1 Minute, 25 Second
மச்சான்ஸ் நடிகை வடநாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் நெருங்கி பழகி வருகிறாராம். பெற்றோரை சொந்த ஊரில் விட்டுவிட்டு சென்னையில் தனியாக வசிக்கும் இவருக்கு அவர்தான் ஆல் இன் ஆல் அழகுராஜாவாம்.
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே லிவிங் டு கெதராக இருந்து வருகிறார்களாம்.
மச்சான்ஸ் நடிகையின் கம்பெனியனாக சுட்டிக்காட்டப்பட்ட அந்த நபர் சில நாட்களாக காணவில்லையாம்.
காரணம், என்னவென்று விசாரித்தபோது அவர் சமீபத்தில் மும்பை சென்றிருந்த போது ஒரு விபத்தில் சிக்கி விட்டாராம்.
ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நாற்பது தையல் போடப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம்.
காதலருக்கு ஏற்பட்ட விபத்தை எண்ணி தற்போது மச்சான்ஸ் நடிகை கவலையில் ஆழ்ந்திருக்கிறாராம். அந்த கவலையிலேயே கொஞ்சம் இளைத்தும் போய் விட்டாராம்.
Average Rating