தெமட்டகொடையிலிருந்து இரத்மலானை வரை சாரதியின்றி தானாக சென்ற ரயில்..!
Read Time:57 Second
கொழும்பு தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை சாரதியின்றி தானாக நகரத்தொடங்கிய ரயிலொன்று கல்கிஸை, இரத்மலானை ரயில்நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும் வரை கட்டுப்பாடின்றி பயணித்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெமட்டகொடையிலிருந்து இன்று அதிகாலை 1.45 மணியளில் இந்த ரயில் தானாக நகரத் தொடங்கியுள்ளது.
பல ரயில் நிலையங்களைக் கடந்து சென்ற இந்த ரயில் கல்கிஸை, இரத்மலானை ரயில் நிலையங்களுக்கிடையில் நிறுத்தப்படும் வரை தானாக பயணித்தது.
இச்சம்பவத்தினால் எவரும் காயமடையவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Average Rating