மனைவியின் உடலை துண்டு துண்டாக வெட்டி குளிர்சாதனப் பெட்டியில் வைத்த கணவர் கைது

Read Time:4 Minute, 2 Second

knifeகிரிஷ் ஸ்ரீரங்க் போடே என்பவர் தனது மனைவி மதுமதியை குடும்ப பிரச்சினை காரணமாக துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் மும்பையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் கிரிஷ் தனது உறவினர் ஒருவருக்கு தொலைபேசி அழைப்பு ஏற்படுத்தி மனைவியை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்துவிட்டேன் உடல் பாகங்களை வெளியே வீச வேண்டும். தனியாக இதனை செய்வதற்கு பயமாக உள்ளது எனவே உதவிக்கு வரும்படி அழைத்துள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உடனே பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பொலிசார் கிரிஷின் வீட்டிற்கு சென்று கிரிஷிடம் மதுமதி பற்றி விசாரணை நடத்தியுள்ள போது அவர் எந்த பதிலும் கூறாததால் பொலிசார் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தியுள்ளார்கள்.

அப்போது குளியலறையில் இடுப்புக்கு கீழே ஒரு பெண்ணின் உடல் பாகம் ரத்தக்கறையுடன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல வீட்டில் உள்ள குளிர்சாதனப் பெட்டியில் தலை கைகள் கழுத்தில் இருந்து இடுப்பு வரையிலான உடல் பாகங்கள் தனித்தனியாக வைக்கப்பட்டிருந்தன.
உடல் பாகங்களை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின் அவை மதுமதியின் உடற் பாகங்கள் என தெரியவந்துள்ளது.

அதன் பின்னர் கிரிஷிடம் நடத்திய விசாரணையில் மதுமதியை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி கூறுபோட்டதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் அவர் இந்த கொலைக்கான காரணம் குறித்து கூறுகையில் மதுமதிக்கு வேறொரு ஆணுடன்தொடர்பு இருந்தததாகவும். அவர் வேலைக்கு சென்ற பின்னர் அந்த ஆணை வீட்டிற்கு அழைப்பதாகவும் அந்த ஆணுடனான தொடர்பை விட்டுவிடும்படி மதுமதியை எச்சரித்த . போலுதிலும் மதுமதி அந்த ஆணுடனான தனது தொடர்பை துண்டிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

எவ்வளவோ எடுத்துக்கூறியும் எனது பேச்சை கேட்காத பட்சத்தில் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன் என கூறியுள்ளார்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்ததும் மதுமதியை கத்தியால் சரமாரியாக வெட்டினேன் என்றும் இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார் எனவும் கூறியுள்ளார்.

பின்னர் தடயத்தை மறைப்பதற்காக மதுமதியின் உடலை 4 துண்டுகளாக வெட்டியதாகவும் அதில் 3 துண்டுகளை வீட்டில் உள்ள பிரிட்ஜில் அடைத்து வைத்ததாகவும் மீதம் இருந்ததுண்டை குளியலறையில் மறைத்து வைத்தேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொலை தொடர்பாக கிரிஷ் கூறிய தகவல்கள் உண்மைதானா என்றும் கள்ளக்காதலன் குறித்தும் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எமது “கடவுள்” விக்கினேஸ்வரன் ஐயா, ஜனாதிபதி அவர்களிடம் சத்தியப் பிரமாணம் செய்தது சரியே -செல்வம் எம்.பி
Next post தாய், மகனுக்கு அடித்தது: ஜாக்பாட் 63 ரூபாய்க்கு, 2 டோயோட்டோ கார்..!