புலிகளை விமர்சிப்பதை விடுத்து, மாகாணசபைக்கு ஒத்துழையுங்கள் : சுரேஷ்

Read Time:11 Minute, 16 Second

tna.suresh-Pபுலி­க­ளைப்­ பற்றி பேசிக்­ கொண்­டி­ருப்­ப­தையும் விமர்­சித்துக் கொண்­டி­ருப்­ப­தையும் இவ்­வ­ரு­டத்­தோடு கைவி­டுங்கள். வடக்­கிலே தமிழ் மக்­களால் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு அங்­கீ­கா­ரமும் ஆணையும் வழங்­கி­யுள்­ள­தான மாகாண சபையும் உள்­ளூ­ராட்சி சபை­களும் தமது செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு ஒத்­து­ழைப்­பு­களை வழங்­குங்கள்.

இல்­லையேல் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டு­களை உங்­களால் தவிர்க்க முடி­யா­தி­ருக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் நேற்று சபையில் மத்­திய அர­சாங்­கத்­திற்கு எச்­ச­ரிக்கை விடுத்தார்.

வடக்­கிலே தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் அதி­கா­ரத்தில் இருக்­கின்ற உள்­ளூ­ராட்சி சபை­களின் நட­வ­டிக்­கை­க­ளையும் அவற்றின் இயக்­கங்­க­ளையும் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவும் வட மாகாண ஆளு­நரும் திட்­ட­மிட்டு தடுத்து இடை­யூ­றுகள் ஏற்­ப­டுத்தி வரு­வ­தாக குற்­றம்­சாட்­டிய சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. அர­சாங்கம் அடி­வ­ரு­டி­களை நம்பி செயற்­ப­டு­மானால் இந்­நாடு மீண்டும் மீண்டும் புதை­கு­ழிக்குள் தள்­ளப்­படும் நிலை­யா­கவே அமைந்து விடும் என்றும் அவர் கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற 2014ஆம் ஆண்­டுக்­கான வரவு- செல­வுத்­திட்­டத்தின் மூன்றாம் நாள் குழு­நிலை விவா­தத்தில் முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்­சுக்­கான முன்­மொ­ழிவு மீது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் பஷில் ராஜ­பக் ஷ இங்கு உரை­யாற்­று­கையில் நாடு கண்­டி­ருக்கும் அபி­வி­ருத்தி தொடர்பில் புள்ளி விப­ரங்­களைச் சமர்ப்­பித்து இங்கு உரை­யாற்­றி­யி­ருந்தார். புகை­யி­ரத சேவை இன்று வடக்கை நோக்கி பய­ணித்துக் கொண்­டி­ரு்­கின்­றது. இது குறித்து நாம் மகிழ்ச்­சி­ய­டை­கின்றோம்.

எனினும், சுற்­று­லாத்­து­றையை ஊக்­கு­விக்கும் வகை­யி­லான பல்­வேறு அபி­வி­ருத்­தித்­திட்­டங்­களை வடக்கில் மேற்­கொள்ள முடியும். விமான சேவை­க­ளையும் துறை­முக சேவை­க­ளையும் விரி­வுப்­ப­டுத்­து­கின்ற அர­சாங்கம் பலாலி விமான நிலை­யத்தை புனர்­நிர்­மாணம் செய்­யு­மானால் உல்­லாசப் பய­ணி­களை கவர முடியும் என்­ப­தோடு இந்­தி­யா­வுக்­கான விமான சேவை­யையும் புதுப்­பித்­துக்­கொள்ள முடியும். அது­மாத்­தி­ர­மின்றி புலம்­பெ­யர்ந்தோர் திருச்சி ஊடாக யாழ்ப்­பா­ணத்­துக்கு வர முடியும்.

எனி­னும், அது­பற்றி இங்கு யோசிக்­க­வில்லை. மேலும், காங்­கே­சன்­துறைப் பகு­தியில் எமது மக்கள் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்­டி­யுள்­ள­தோடு அங்கு சுதந்­தி­ர­மான வாழ்க்கை நிலைக்கும் வழி­வ­குக்க வேண்டும் அப்­போ­துதான் உண்­மை­யான அபி­வி­ருத்தி வெளிப்­படும்.

யுத்தம் நிறை­வ­டைந்த பின்னர் வடக்கைப் பொறுத்­த­வ­ரையில் அங்கு தற்­போது எந்­தக்­குற்றச் செயல்­களும் இடம்­பெ­ற­வில்லை. ஆனாலும் இங்கு பேசு­கின்­ற­வர்கள் புலி­க­ளைப்­பற்­றியே பேசு­கின்­றனர். விமர்­சிக்­கின்­றனர். தயவு செய்து இந்த வரு­டத்­துடன் இவற்றைக் கைவி­டுங்கள்.

வட மாகா­ணத்­திற்­கான தேர்தல் இந்­தி­யா­வி­னதும் சர்­வ­தேச நாடு­க­ளி­னதும் அழுத்­தங்­களின் கார­ண­மா­கவே நடத்­தப்­பட்­டது. மாறாக அர­சாங்கம் தானாக முன்­வந்து இதனைச் செய்­ய­வில்லை.

இந்­நி­லையில் வட மாகாண சபை தேர்தலில் வடக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை அங்­கீ­க­ரித்து வாக்­கு­களை வழங்கி மூன்றில் இரண்டு பெரும்­பான்­மையைப் பெற்றுக் கொடுத்­தி­ருக்­கின்­றனர்.

கடந்த செப்­டெம்பர் மாதம் தேர்தல் இடம்­பெற்று தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு சபையை கைப்­பற்­றி­ய­தி­லி­ருந்து அங்கு அர­சாங்­கத்தின் எந்­த­வித ஒத்­து­ழைப்­பு­களும் கிடைக்­க­வில்லை தற்­போது டிசம்பர்் மாதமும் ஆகி­விட்­டது.

ஒரு மாகாண சபை தனது முழு­மை­யான செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்கு மத்­திய அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­புகள் இருக்க வேண்டும். ஆனால், வட மாகாண சபையைப் பொறுத்­த­வ­ரையில் அது இல்லை. காங்கேசன்­துறை பிர­தேச சம்­ப­வங்கள் தொடர்பில் சென்று பார்த்து அது குறித்து ஜனா­தி­ப­தி­யு­டனோ அல்­லது அமைச்­சர்­க­ளு­டனோ முறை­யி­டு­வ­தற்­கான சந்­தர்ப்பம் முத­ல­மைச்­ச­ருக்கு மறுக்­கப்­ப­டு­மே­யானால் வட மாகாண சபையின் அதி­காரம் இருப்­பதில் என்ன அர்த்தம் உள்­ளது.

பாரா­ளு­மன்ற தேர்­த­லிலும் வட மாகாண சபை தேர்­த­லிலும் அதே­போன்று வடக்கின் உள்­ளூ­ராட்சி சபை தேர்­தல்­க­ளிலும் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு அங்­கீ­கா­ரத்­தினை வழங்­கி­யி­ருக்­கின்­றனர். எனவே, வட மாகாண மக்­களின் அங்­கீ­கா­ரத்தின் பிர­காரம் மாகாண சபை­க­ளி­னதும் உள்­ளூ­ராட்சி சபை­க­ளி­னதும் செயற்­பா­டு­க­ளுக்கு அர­சாங்கம் தமது ஒத்­து­ழைப்­பு­களை வழங்கத் தவ­று­மே­யானால் சர்­வ­தே­சத்தின் தலை­யீ­டு­களை அர­சினால் தவிர்க்க முடி­யா­தி­ருக்கும் எனக் கூறினார்.

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. இவ்­வாறு உரை­யாற்றிக் கொண்­டி­ருந்­த­போது அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்தா குறுக்­கீடு செய்து சுரேஷ் எம்.பி.யைப் பார்த்து ஏதோ கூறினார்.

இத­னை­ய­டுத்து ஆவே­ச­ம­டைந்த சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் எம்.பி. அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவைப் பார்த்து நான் இப்­படிக் கூறு­வதால் உங்­க­ளுக்கு ஏன் கோபம் வரு­கின்­றது. நீங்­கள்தான் இதற்குக் காரணம்.

வடக்கில் தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் அதி­கா­ரத்­தி­லுள்ள உள்­ளூ­ராட்சி சபை­களின் நட­வ­டிக்­கை­களை முடக்­கு­வ­தற்கும் அதனை இயங்­க­வி­டாது செய்­வ­தற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவா­னந்­தாவே கார­ண­மாக இருக்­கின்றார். வட மாகாண அபி­வி­ருத்திக் குழுவின் தலை­வ­ராக இருக்கும் இவரும் ஆளு­நரும் இணைந்தே இவ்­வா­றான செயற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். வட மாகாண உள்­ளூ­ராட்சி சபை­களின் உறுப்­பி­னர்கள் அல்லாது தமக்கு ஏற்ற அதி­கா­ரி­க­ளி­னூ­டாக இவர்கள் செயற்­பட்டு வரு­கின்­றனர்.

இத்­த­கைய நிலை­மை­க­ளுக்கு அமைச்­சரே (பஷிலைப் பார்த்து) நீங்கள் இடம்­கொ­டுக்க வேண்டாம் என்று கேட்­டுக்­கொள்­கிறேன். வடக்கில் உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான உலக வங்­கியின் உத­வி­கூட மறுக்­கப்­பட்டு அது நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான உத­விகள் ஏன் மறுக்­கப்­பட வேண்டும். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்­புக்கு அந்த மக்கள் வாக்­க­ளித்­தார்கள் என்ற ஒரே கார­ணத்­துக்­கா­கவே இவை மறுக்­கப்­ப­டு­கின்­றன.

2011 ஆம் ஆண்டில் நாம் அர­சாங்­கத்­துடன் 18 சுற்றுப் பேச்­சு­களை நடத்­தி­யி­ருந்தோம். இந்தப் பேச்­சு­வார்த்­தை­க­ளின்­போது அர­சாங்­கத்தின் நடவடிக்கைகளுக்கு எமது முழு ஆதரவினையும் தருவதாகவும் உறுதியளித்திருந்தோம். எனினும், இதன்போது அரசாங்கம் தடம் மாறி பயணி த்துக் கொண்டிருந்ததால் பேச்சுகளில் நாம் நம்பிக்கையிழந்தவர்களானோம்.

நாம் அரசாங்கத்துடன் பேச்சுகளில் ஈடுபட்டதானது எம்மை மட்டும் கருத்திற் கொள்ளாது ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஓர் தீர்வு ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே ஆகும்.

எனவே, அமைச்சர் (பஷிலைப் பார்த்து) எம்மைப் பற்றி சிந்தியுங்கள். வடக்கு, கிழக்கின் நிலைமைகள் பற்றி சிந்தியுங்கள், எமது மக்கள் குறித்து சிந்தியுங்கள். அதை விடுத்து அடிவருடிகளை நம்பி செயற்படுவீர்களேயானால் இந்நாடு மீண்டும் மீண்டும் புதைகுழிக்குள் தள்ள ப்படுவதாகவே அமைந்துவிடும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாய், மகனுக்கு அடித்தது: ஜாக்பாட் 63 ரூபாய்க்கு, 2 டோயோட்டோ கார்..!
Next post வவுனியாவில் வயோதிபப் பெண் மீது, துப்பாக்கிச்சூடு