மாணவர் விஸாவில் இலங்கை வரும், மாலைதீவு யுவதிகள்; கொழும்பில் விபசாரத்தில்
Read Time:1 Minute, 22 Second
மாணவர் விஸா மூலம் மாலைதீவிலிருந்து இந்நாட்டுக்கு அழைத்து வரப்படும் யுவதிகளைக் கொண்டு கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் விபசாரம் நடத்தப்படுவதை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்துள்ளனர்.
இலங்கையில் உயர்கல்வி கற்க விஸா பெற்றுத் தரும் நிறுவனம் என்ற ரீதியில் செயற்பட்ட இந்த விபசார நடவடிக்கை நீண்டகாலமாக நடைபெற்று வருவதாகவும் 20 – 28 வயதுக்கிடைப்பட்ட பல பெண்கள் இவ்வாறு அழைத்துவரப்பட்டு விபசாரம் நடத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
பகல் நேரத்தில் கல்வி நடவடிக்கையில் ஈடுபடும் இந்த மாலைதீவு யுவதிகள் இரவு நேரத்தில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆடம்பர வீடுகளுக்குச் சென்று விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் ஒரு இரவுக்கு 40,000 ரூபாவை அறவிடுவதாகவும் தெரியவந்துள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
Average Rating