முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு; தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி
Read Time:59 Second
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறப்பதற்கு அனுமதியளித்தமையை எதிர்த்து தமிழக அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நினைவு முற்றத்தை திறக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி தந்ததற்கு எதிராகவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்வு முடிந்ததையடுத்து இந்த மனு விசாரணைக்கு ஏற்கதக்கதல்ல என்று கூறியே வழக்கை தள்ளுபடி செய்தது என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.
Average Rating