பாலியல் துஷ்பிரயோக குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

Read Time:1 Minute, 24 Second

arrest-020பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதி மன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குறைந்த தனது மருமகள் முறையான பெண் பிள்ளையொன்றை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய கனகராயன்குளம் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நபரொருவருக்கே மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி சந்திரமணி விஸ்வலிங்கம் இத் தீர்ப்பை வழங்கியிருந்தார்.

இதேவேளை குற்றவாளி 25000 ரூபா தண்டப்பணமும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 75000 ரூபா வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளதுடன் அதனை வழங்க தவறும் பட்சத்தில் மேலும் ஒரு வருடம் கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பளித்திருந்தார்.

இவ் வழக்கினை சட்டமா அதிபர் சார்பாக அரச சட்டத்தரணி நிஸாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு; தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி
Next post புறக்கோட்டை தீ: இரசாயன பகுப்பாய்வாளர், மின் பொரியிலாளர் பரிசோதனை