யாழில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
Read Time:53 Second
யாழ். நாராந்தனை பிரதேசத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
நாரந்தனை வடக்கு, தம்பட்டி பகுதியைச் சேர்ந்த மகாதேவன் பிரதீப் (வயது-23) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணைகளின்படி குறித்த இளைஞன், கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்தே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இளைஞனின் சடலம், யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காகஒப்படைக்கப்பட்டுள்ளது என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
Average Rating