புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று, ஒரு சொல்லு சொல்லியிருந்தால் நானும் இன்று, ஓர் எம். பி தான் -ஆனந்தசங்கரி
புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று நான் ஒரு சொல்லு சொல்லியிருந்தால் இன்று நானும் ஒரு எம்.பி. யாகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்திருப்பேன் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுக் கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணம் கே. கே. எஸ். வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
பிரபாகரனை எவ்வாறு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதி என்று ஏற்றுக்கொள்வது?? அவர் பொதுமக்கள் முன்பாக வந்தாரா? அல்லது தேர்தலில் போட்டியிட்டாரா? ஆனால் நான் திரும்பத், திரும்பச் சொல்லியிருக்கிறேன் “பேச்சுவார்த்தைக்கு விடுதலைப்புலிகள் தான் போகவேண்டும்” என்று. நாங்கள் போனால் கொடுக்கிற வாக்குறுதிகளை தராமல் அரசாங்கம் ஏமாற்றும்.
விடுதலைப் புலிகளிடம் ஆயுதம் இருந்தது. புலிகள் சென்றால் அரசாங்கம் பயப்படும், வாக்குறுதிகளையும் நிறைவேற்றும். இதற்காகத் தான் நான் விடுதலைப் புலிகளுடன் முரண்பட்டேனே தவிர, விடுதலைப் புலிகளிடம் எனக்கு எந்தவித கோபமும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating