நள்ளிரவில் போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் : ஹீரோயின் குமுறல்

Read Time:1 Minute, 50 Second

Kollywood-news-7965நள்ளிரவு நேரத்தில் ஆபாசமாக பேசி தொல்லை தருகிறார்கள் என்று குமுறினார் சஞ்சனா. ஒரு காதல் செய்வீர் படத்தில் நடித்தவர் சஞ்சனா. கன்னடம், தெலுங் கில் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

அவர் கூறியதாவது: நள்ளிரவு நேரத்தில் சிலர் எனக்கு போன் செய்து ஆபாசமாக பேசுகிறார்கள். இதுபற்றி போலீசில் புகார் செய்ய எண்ணினேன். ஆனால் ஏற்கனவே பலமுறை இதுபோல் புகார் கொடுத்துவிட்டேன்.

ஆனாலும் இதுபோன்று அடிக்கடி நிகழ்கிறது. இவர்களில் சில நல்ல ரசிகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் எனது நடிப்பை பாராட்டிவிட்டு பாய் சொல்லி விடுவார்கள். ஆனால் ஒரு சிலர் ஆபாசமாக பேசுவார்கள்.

அவர்கள் நேரடியாக என்னிடம் பேசினால் அதை நான் எதிர்கொள்ளத்தயாராக இருக்கிறேன். ஆனால் போனில் ஆபாசமாக பேசுபவர்களை என்ன செய்வது. இப்படிப்பட்டவர்களின் செல்போன் எண்களை நான் எனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளேன்.

எனது ரசிகர்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார்கள். அப்போது அந்த நபர் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இதுபோன்று தொல்லை தருபவர்களின் தாயும் ஒரு பெண்தான். எனவே இனியாவது இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் நாகரிகத்துடன் பேச கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உதயன் பத்திரிகையும், அதன் விருதும் -ஜெகன் பத்மநாதன் (முகநூலிலிருந்து)
Next post கிணற்றில் விழுந்து 03 வயது குழந்தை மரணம்