கிணற்றில் விழுந்து 03 வயது குழந்தை மரணம்
Read Time:51 Second
யாழ். அச்சுவேலி வடக்குப் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை 03 வயதுடைய பெண் குழந்தையொன்று கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.
அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த சிவானந்தன் தர்மினி (வயது 03) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இந்தக் குழந்தையின் தாய் சமையல் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, இந்தக் குழந்தை கிணற்றடிக்குச் சென்று தவறி கிணற்றினுள் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கிணற்றிலிருந்து சடலத்தை அச்சுவேலி பொலிஸார் மீட்டுள்ளனர்.
Average Rating