காதல் கசப்பால், கழுத்துப்பட்டியை எமனாக்கிக் கொண்ட மாணவி தற்கொலை

Read Time:1 Minute, 17 Second

sucide-006காதல் தோல்வியால் மனமுடைந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வரக்காபொல – உடபாகே – தொரவக்க பிரதேசத்தில் இச்சம்பவம் நேற்று (09) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை கழுத்துப் பட்டியை பயன்படுத்தி குறித்த மாணவி தூக்கிட்டுக் கொண்டுள்ளார்.

வரக்காபொல பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 15 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொள்வதாக மாணவியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை இன்று (10) இடம்பெறவுள்ளது.

வரக்காபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலர் சுகம் அனுபவிக்க கட்டணம் அறவிட்ட தனியார் பஸ்
Next post ஆணாக உணர்ந்த பெண்ணும், பெண்ணாக உணர்ந்த ஆணும் அதிசய திருமணம்