ஓரினச்சேர்க்கை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது: சோனியா

Read Time:2 Minute, 24 Second

homo-001இந்திய தண்டனை சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கையானது குற்றம் என்று நேற்று அந்தநாட்டு உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது.

இந்த தீர்ப்பு முரண்பாடாக உள்ளது என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாகாந்தி, நிதியமைச்சர் ப. சிதம்பரம், சட்ட அமைச்சர் கபில் சிபல் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதமானது என்று கூறும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால், இப்பிரச்சினை குறித்து மத்திய அரசு ஆராயவுள்ளது.

இதுகுறித்து சோனியா காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஓரின சேர்க்கை சட்டவிரோதமானது என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது ஏமாற்றமளிக்கிறது.

பாராளுமன்றம் இப்பிரச்சினை குறித்து பேசும் என்று நான் நம்புகிறேன். இந்த உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் உட்பட அனைத்து இந்திய குடிமக்களின் வாழ்வையும் சுதந்திரத்தையும் அரசியலமைப்பு பாதுகாக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ப. சிதம்பரம் கூறுகையில், இந்த தீர்ப்பானது நம்மை 1860-ம் ஆண்டுக்கு அழைத்து சென்றுள்ளது. இதை எதிர்க்கும் அரசியல்வாதிகளின் பெயர்களை கூற நான் விரும்பவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. அரசு இப்பிரச்சினை குறித்து மறு ஆய்வு செய்ய வேண்டும்.

சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், 377-வது பிரிவு குறித்து டெல்லி உச்சநீதிமன்ற தீர்ப்பை மாற்றியமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க அரசு ஆலோசிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமா? : கொந்தளிக்கும் நடிகர், நடிகைகள்..
Next post ரஜினியை பற்றி சுவாரஸ்யமான 5 தகவல்கள்….