(PHOTOS) வாழைப்பழத்துக்காக குத்துச்சண்டையில் ஈடுபட்ட குரங்குகள்..!

Read Time:2 Minute, 0 Second

3342_newsthumb_Mokey-1வாழைப்பழமொன்றுக்காக இரு குரங்குகள் குத்துச்சண்டையில் ஈடுபட்ட வித்தியாசமான சண்டைக்காட்சியொன்றினை வியட்நாமைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் படமாக்கியுள்ளார்.

இச்சம்பவம் இந்தோனேஷியாவின் சுமாத்ராவிலுள்ள கனங் லியூஸர் தேசிய பூங்காவில் இடம்பெற்றுள்ளது.

30 வயதான ரையான் டிபூட்த் என்ற வியட்நாம் புகைப்படக கலைஞரே இதனை படம்பிடித்துள்ளார்.

ஒரங்குட்டான் மற்றும் மகாக் இனத்தைச் சேர்ந்த இரு குரங்குகளே வாழைப்பழத்துக்காக குத்துச்சண்டையில் ஈடுபட்டுள்ளன.

ஒரங்குட்டான் குரங்கின் தாய் கொடுத்த வாழைப்பழத்தை மகாக் குரங்கு சாப்பிட முற்பட்ட போதே இச்சண்டை மூண்டுள்ளது.


அரைவனப்பகுதியான குறித்த பூங்காவில் ஒரங்குட்டான் குரங்குகளுக்கு உணவு வழங்கப்படும் இடத்தில்தான் இச்சண்டை இடம்பெற்றது என ரையான் தெரிவித்துள்ளார்.

இந்த வினோதமான சண்டை குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இருவேறு இன குரங்குகளிடையே நடந்த இந்த விளையாட்டுத்தனமான சண்டையை நான் ரசித்தேன். இது பார்ப்பதற்கு குத்துச்சண்டை போல் தெரிந்தது.

மகாக்கை ஒரங்குட்டான் தாக்கி விரட்ட முயன்றபோதிலும் மகாக் பின்வாங்கவில்லை. இதன்போது தாய் ஒரங்குண்டான் அமைதியாக அருகில் இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கணவனைக் கொன்று மலசலக் குளியில் வீசிய மனைவி உட்பட இருவருக்கு மரண தண்டனை
Next post ஜனாதிபதி மஹிந்த, குமாரனின் மன்மத லீலைகள்! (அதிர்ச்சிப் படங்கள்)