பற்சிகிச்சைக்காக சிறையிலிருந்து தப்பிச் சென்று, சிகிச்சையின் பின் மீண்டும் வந்த கைதி..!
Read Time:1 Minute, 12 Second
சுவீடனிலுள்ள சிறையொன்றின் கைதியொருவர் கடும் பல் வலி காரணமாக, சிகிச்சை பெறுவதற்காக சிறையிலிருந்து தப்பிச் சென்று, சிகிச்சை முடிந்தவுடன் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார்.
இக்கைதிக்கு பல் வலி ஏற்பட்டு, முகம் வீங்கி பல் வலி தாங்கமுடியாமல் இருந்தபோது அதிகாரிகளுக்கு அறிவித்தார். ஆனால் அவர்கள் அதை கருத்திற்கொள்ளவில்லையாம்.
இதனால் அக்கைதி பல் வலி தாங்காமல் சிறையை உடைத்துச் வெளியே சென்று பல் மருத்துவர் ஒருவரிடம் சிகிச்சை பெற்றார்.
சிகிச்சை முடிந்தவுடன் அவர் தப்பியோட முற்படாமல் மீண்டும் சிறைக்கு வந்துள்ளார்.
பல்வலி காரணமாகவே தான் வெளியே சென்றதாகவும் சிகிச்சை பெற்றுக் கொண்டதால் திரும்பி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Average Rating