காதலியின் தாயிடம் அடிவாங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்: யாழில் சம்பவம்

Read Time:1 Minute, 28 Second

attack-04யாழ். பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் காதல் விவகாரம் காரணமாக அடிவாங்கிய சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாம்பழம் சந்தி பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருடன் யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பழகி வந்துள்ளார்.

இவர்கள் இருவரின் தொடர்பு குறித்த பெண்ணின் வீட்டிற்கு தெரியவந்ததையடுத்து, குறித்த பெண்ணின் தாயார் பொலிஸ் உத்தியோகத்தரிடம் தனது மகளை போன்று பேசி வீட்டிற்கு அழைத்துள்ளார்.

தன்னுடன் பழகும் பெண் அழைத்தாக நம்பிய பொலிஸ் உத்தியோகத்தர், பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த குறித்த பெண்ணின் சகோதரன் மற்றும் தாயார் இணைந்து பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியுள்ளனர்.

இந்த தாக்குதலிலிருந்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தப்பியோடி யாழ். பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளதாக தெரியவருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பற்சிகிச்சைக்காக சிறையிலிருந்து தப்பிச் சென்று, சிகிச்சையின் பின் மீண்டும் வந்த கைதி..!
Next post அழகுராஜா கார்த்தியின் “பிரியாணி”யில் இருந்து மீண்டும் தீய்ந்துபோன வாசம்!