ஜோடியாக இணைந்து கொலை செய்யும் ஆசையில் ஒருவரை கொன்ற புதுமணத் தம்பதி கைது
புதிதாக திருமணம் செய்தபின் ஜோடியாக இணைந்து கொலை செய்ய வேண்டுமென்ற ஆசையினால் ஒருவரை கொலை செய்த தம்பதியொன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளது.
பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்த 22 வயதான எலைட் பார்பர் மற்றும் 18 வயதான மிரண்டா பார்பர் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.
இவர்கள் திருமணம் செய்து 3 வாரங்களேயான நிலையில் 42 வயதான டொரி லபாரெரா என்பவரை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.
இவர்கள் லபாரெராவுக்கு ஆசை காட்டி தம்மை சந்திப்பதற்கு வீட்டுக்கு வரவழைத்தபின் அவரை கொலை செய்யததாக கூறப்படுகிறது.
ஜோடியாக கொலை செய்யும் நோக்குடன் லபாரெராவை தாம் கொன்றதை இத்தம்பதியினர் ஒப்புகொண்டுள்ளனர்.
இதற்குமுன் பலரை கொல்ல முயன்றதாகவும் ஆனால் அம்முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை எனவும் எலைட் பார்பர் கூறியுள்ளார்.
இவரின் 22 ஆவது பிறந்த தினத்தன்று இக்கொலை இடம்பெற்றுள்ளது.
எனினும், இதற்குமுன் இடம்பெற்ற மர்மமான கொலைகளுக்கும் இத்தம்பதியினருக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பது குறித்தும் பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating