முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு, நிதி திரட்டும் பழநெடுமாறன்!
Read Time:1 Minute, 6 Second
முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு நிரந்தர பராமரிப்பு மற்றும் பாதுகாப்புக்காக நிதி திரட்டும் நடவடிக்கைகளை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் ப.பழநெடுமாறன் ஆரம்பித்துள்ளார்.
தலைமையில் ஒரு குழு ரயில் மூலம் சனி (டிச.14) ஞாயிறு (டிச.15) ஆம் திகதிகளில் பிரசார பயணம் செய்ய உள்ளது.
சென்னையில் இருந்து புறப்பட்டு நாகர்கோவில் வரை ஒரு ரயிலும், நாகர்கோவிலில் இருந்து கோயம்புத்தூர் வரை மற்றொரு ரயிலிலும் செல்ல உள்ளனர்.
ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் தமிழ் உணர்வாளர்களிடம் இருந்து நிதி திரட்டவும் உள்ளனர்.
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச் சுவரை அரசு இடித்ததைக் கண்டிக்கும் வகையில் இந்தப் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
Average Rating