பொலிஸாரைக் கண்டதும் நிர்வாணமாக நடனமாடிய, தாயும் பிள்ளைகளும் கைது
ஜாஎல,தண்டுகம பிரதேசத்தில் பெண்ணொருவரும் அவரது இரண்டு புதல்விகளும் நடத்தி வந்த பாரிய சூதாட்ட நிலையமென்றை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் அதிகாரிகளை கடமையைச் செய்ய விடாமல் உடைகளைக் களைத்துவிட்டு நிர்வாணமாக நடனமாடிய சூதாட்ட நிலையத்தை நடத்தி வந்த பெண்ணையும் அவரது இரண்டு புதல்விகளையும் பிணையில் விடுவிக்க மறுத்த நீர்கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.ஜீ. குணதாஸ அவர்களை தொடர்ந்தும் இம்மாதம் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
இந்த சூதாட்ட நிலையத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தனவந்தர்கள் ஐவரையும் பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். அவர்களையும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதவான் உத்தரவிட்டார்.
பேலியகொடை பொலிஸார் இந்த நிலையத்தை சுற்றிவளைத்தபோது அதை நடத்தி வந்த பெண்கள் மூவரும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து தனவந்த ஆண்களும் அவர்களது ஆடைகளைக் களைத்துவிட்டு கூச்சலிட்டு நடனமாடியதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பேலியகொட பொலிஸார் இந்த நிலை குறித்து ஜாஎல பொலிஸாருக்கு அறிவித்த பின்னர் ஜாஎல பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர்கள் இருவரும் பெண் பெலிஸாரும்அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.
நிர்வாணமாக ஆடுவதைப் பார்க்க பெருந்தொகையான அயலவர்கள் அந்த இடத்தில் குவிந்தனர் என்றும் அதன் பின்னர் இந்த எட்டு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating