பிடல் காஸ்ட்ரோவின் புதிய போட்டோவை வெளியிட்டது கியூபா அரசு மீடியா!

Read Time:1 Minute, 46 Second

castro-2கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ தொடர்பாக அவ்வப்போது ஏதாவது பரபரப்பு தகவல் வெளியாவது வழக்கம்தான். லெ்சன் மன்டேலாவின் மறைவு குறித்து காஸ்ட்ரோ கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை என்றவுடன், அவரது உடல்நலம் மோசமாகி, பேசமுடியாத நிலையில் உள்ளார் என மீடியாக்களில் செய்தி வெளியாகிறது.

இதையடுத்து தற்போது திடீரென போட்டோ ஒன்றை (மேலேயுள்ள போட்டோ) வெளியிட்டுள்ளது, கியூபாவின் அரசு மீடியா.

கடந்த 4 மாதங்களின் பின் வெளியாகும் காஸ்ட்ரோவின் முதலாவது போட்டோ இது என்பதால், இதற்கு தனி மவுசு!

போட்டோவில் காஸ்ட்ரோவுடன் பேசிக்கொண்டு இருப்பவர், ஸ்பானிஷ் செய்தியாளர் இக்னாசியோ ரமோனெட்.

“நானும் அவரும் சுமார் இரண்டரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். நெல்சன் மன்டேலாவின் மரணம், வெனிசூலாவின் அரசியல், மற்றும் காலநிலை மாற்றங்கள் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார். மிகுந்த உடல் நலத்துடன் உள்ளார் அவர்” என்று செய்தியாளர் இக்னாசியோ ரமோனெட் அசோசியேட்டட் பிரஸ் செய்தி ஏஜென்சிக்கு தெரிவித்தார்.

அட, இந்த போட்டோவை வைத்து இன்னும் ஒரு நான்கு ஐந்து மாதங்களை ஓட்டிவிடுவார்கள்.

castro-2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தந்தை இறந்தது கூட தெரியாமல், அழுகிய உடலுடன் ஒருவாரம் இருந்த மகன்
Next post கொடிகாமம் பொலிஸாரைத் தாக்க முற்பட்ட சந்தேக நபர் கைது