கள்ளக் காதலியின் கணவனை அடித்துக் கொன்று, காட்டில் சடலத்தை வீசிய நபர் கைது
Read Time:1 Minute, 21 Second
ரக்வான பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதான திருமணமான நபரொருவரை அவரது மனைவியின் கள்ளக் காதலன் தடியொன்றால் தாக்கி கொலை செய்த பின்னர் இழுத்துச் சென்று காட்டுக்குள் போட்டிருந்த நிலையில் நேற்று முன்தினம் 15 ஆம் திகதி காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக காலஞ்சென்ற நபரின் மனைவியினது கள்ளக் காதலனையும் மனைவியையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக ரக்வான பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 10 ஆம் திகதி காலஞ்சென்ற நபர் காணாமற் போய்விட்டதாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட பொலிஸார் இந்த நபரின் சடலத்தை காட்டுப் பகுதியிலுள்ள ஓடையொன்றிலிருந்து நேற்று முன்தினம் கைப்பற்றியுள்ளனர்.
ஆர்.ஏ. பிரேமலால் என்ற விவசாயியே இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Average Rating