பாதசாரி கடவைகளில் இரு விபத்துகள்: இருவர் பலி
Read Time:1 Minute, 5 Second
தம்புள்ளை-குருணாகல் மற்றும் தம்புள்ளை- மாத்தளை வீதிகளிலுள்ள பாதசாரி கடவைகள் இரண்டில் இடம்பெற்ற இருவேறு விபத்துகளில் இருவர் பலியாகியுள்ளனர்.
பாண் வாங்குவதற்காக சென்ற முதியவர் ஒருவர் பாதசாரி கடவையின் ஊடாக பாதையை கடந்துகொண்டிருந்த போது தனியார் பஸ் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இதேவேளை,பாதசாரிகளுக்கு வழிவிட்டு பாதசாரி கடவைக்கு முன்பாக நின்றுகொண்டிருந்த வான் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிள் சாரதி பலியாகியுள்ளார்.
இன்று புதக்கிழமை இடம்பெற்ற இந்த இருவேறு விபத்துகள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating