மந்திரவாதியின் பிடியில் வசந்தமான நடிகை!
Read Time:1 Minute, 25 Second
பொன்வசந்தமான நடிகை சமீபத்தில் சரும நோயால் பாதிக்கப்பட்டு முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை இழந்தார்.
இருந்தும் தன் மார்க்கெட் சரியாமல் இன்னும் தொடர்ந்து சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருகிறார்.
இவர் சருமநோயின் பிடியில் மாட்டிக் கொண்டிருந்தபோது இவர் மருத்துவரை தேடிப் போகவில்லையாம். மாறாக மந்திரவாதி ஒருவரை அணுகி தனக்கு பில்லி சூனியம் பேய் பிடித்திருந்தால் அதை விரட்டுமாறு கேட்டுக் கொண்டாராம்.
அவரும் பிரமாதமான பூஜைகளை நடத்தி அவருடைய சரும நோயை நீக்கிவிட்டாராம்.
இப்போது அதேபோன்ற நிலை மீண்டும் பொன்வசந்தமான நடிகைக்கு வந்துள்ளதாம்.
அதையும் அதே மந்திரவாதிதான் பூஜைகளை போட்டு குணமாக்கி வருகிறாராம். எது எப்படியோ நடிகை மீண்டு வந்தால் சரி என திரையுலகமும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறது.
Average Rating