வேலைக்கென அழைத்துச் செல்லப்பட்ட இரு யுவதிகள் மீது பாலியல் தொந்தரவு

Read Time:1 Minute, 59 Second

Arrestingதிருகோணமலை குச்சவெளிப் பகுதியில் உல்லாச விடுதியில் வேலைக்கென அழைத்துச் சென்று தவறான முறையில் நடத்தியதாக கருதப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க குச்சவெளி சுற்றுலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பைச் சேர்ந்த 12 வயதான சிறுமி ஒருவரும் அவரது 25 வயது சகோதரி ஒருவரும் நபரொருவரால் குச்சவெளிக்கு அழைத்துவரப்பட்டு குறித்த விடுதியில் வேலைக்கென சில நாட்கள் தங்க வைக்கப்பட்டதாகவும் பின்னர் விடுதி உரிமையாளர் மற்றும் உதவியாளர்கள் சிலரும் தம்மை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் நிதீமன்றத்தில் விசாரணைகளில் குறித்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை தாங்க முடியாது தாம் தப்பித்து சென்ற தாகவும் நேற்று நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இதனை விசாரித்த திருகோணமலை மாவட்ட நீதவானும் சுற்றுலா நீதிமன்ற நீதவானுமான எஸ்.சதீஸ்தரன் குறித்த உரிமையாளர்களை உடன் கைது செய்து நீதிமன்றில் ஆஜார் செய்யுமாறு குச்சவெளி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இரு சந்தேக நபர்களும் நேற்று பொலிஸார் மன்னிலயில் ஆஜர் செய்யப்பட்ட போது அவர்களை வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹீரோவாக களமிறங்கும் கவுண்டமணி
Next post சர்ச்சையில் சிக்கிய நடிகை!