கள்ளத் தொடர்பு: கணவரால் மனைவி வெட்டிக் கொலை
Read Time:59 Second
கொழும்பு பாதுக்க பொலிஸ் பிரிவில் கந்த துன்னால, ஹங்வெல்ல பகுதியில் கணவன் தனது மனைவியை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
இக்கொலைச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றதாக பாதுக்க பொலிஸார் தெரிவித்தனர்.
50 வயதுடைய கல்யாணி என்பரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கள்ளத் தொடர்பு காரணமாக இக்கொலை இடம்பெற்றிருக்கலாம் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரண விசாரணையை அவிசாவளை நீதவான் மேற்கொள்ளவுள்ளார். பாதுக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating