மலையாள ஹீரோக்களின் பேவரைட் ஆனார் ஜனனி அய்யர்..!

Read Time:2 Minute, 13 Second

017தமிழ் படங்களில் வாய்ப்பு இல்லாததால் கவலை அடைந்த ஜனனி அய்யர், மலையாள படங்களில் கவனத்தை திருப்பினார்.

‘அவன் இவன்’ படத்தில் விஷால் ஜோடியாக நடித்தவர் ஜனனி அய்யர். பாலா இயக்கிய படம் என்பதால் அடுத்தடுத்து கைநிறைய படங்கள் குவியும் என்று எதிர்பார்த்தவருக்கு ஒன்று இரண்டு படங்கள் மட்டுமே வந்ததால் கவலை அடைந்தார்.

அந்த படங்களும் இன்னும் திரைக்கு வரவில்லை. வாய்ப்புக்காக காத்திருந்தால் ஓரம்கட்டிவிடுவார்கள் என்று நெருக்கமானவர்கள் அட்வைஸ் செய்ததையடுத்து மலையாள படங்களில் கவனத்தை திருப்பினார். அதற்கு பலன் கிடைத்துள்ளது.

‘த்ரீ டாட்ஸ்’ என்ற மலையாள படத்தில் அவர் நடித்தார். அப்படம் அவருக்கு பெயரை பெற்றுத்தராவிட்டாலும் மோகன்லால் ஜோடியாக ‘கூதரா’ என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதையடுத்து பிருத்விராஜ் ஜோடியாக ‘செவன்த் டே’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். தொடர்ந்து அஜித் பிள்ளை நடிக்கும் ‘முசாயிலே குதிர மீனுகள்’ என்ற படத்திலும் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மலையாள ஹீரோக்களுடன் நட்பாக பழகுவதால் அவர்களது பேவரைட் ஹீரோயினாக ஜனனி மாறியுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’நான் அதிர்ஷ்டகாரி. இவ்வளவு பெரிய நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வரும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு படத்திலும் வௌ;வேறு விதமான கேரக்டர்கள். தமிழ் படங்களிலும் இதுபோன்ற வாய்ப்புகளை எதிர்பார்க்கிறேன்’ என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 ஆம் வகுப்பு மாணவியைக் கர்ப்பமாக்கிய பாதிரியார் சரண்
Next post சிங்களத்து சின்னமயில் “நடிகை நதீஷா ஹேமமாலி” (அவ்வப்போது கிளாமர்)