குளிர்பானத்தில் விஷம் கலப்பு சீனாவில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்
Read Time:57 Second
சீனாவின் மத்திய பகுதியில் இருக்கும் ஹ¨னான் மாகாணத்தில் லோயூடி நகரில் உள்ள பள்ளிக்கூடம் அருகே பாலுடன், மூலிகை, இனிப்பு கலந்த குளிர்பானத்தை ஒரு பெண் விற்றார்.
அதை பல குழந்தைகள் வாங்கி குடித்தனர். சற்றுநேரத்தில் 19 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 3 பேர் அபாயநிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.
இந்த குளிர்பானத்தில் எலி மருந்து விஷம் கலந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இதையட்டி குளிர்பானத்தை விற்ற 34 வயதுள்ள பெண்ணை பிடித்து போலீசார் விசாரிக்கிறார்கள்.
Average Rating