(PHOTOS) இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தமிழ் பெண்கள்..
Read Time:1 Minute, 4 Second
இராணுவத்தில் பயிற்சிகளை முடித்த கொண்டு 45 தமிழ் பெண்கள் உட்பட 55 பெண்கள் வெளியேறியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
பயிற்சிகளை முடித்து வெளியேறிய தமிழ் பெண்களின் அணி வகுப்பு மரியாதை கடந்த 18 ஆம் திகதி அனுராதபுரத்தில் அமைந்துள்ள இராணுவ சமிக்ஞை படைப் பிரிவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் வன்னி பிராந்திய இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் போனிபஸ் பெரேரா பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மதவாச்சியில் உள்ள இராணுவ தொண்டர் படையணிக்கு 45 தமிழ் பெண்களும் 10 சிங்கள பெண்களும் இணைத்து கொள்ளப்பட்டதுடன் அவர்களுக்கு மூன்று மாத பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating