இந்தியரைக் கடத்திய பெண்ணுக்கு சிறை
அமெரிக்காவில், இந்தியரை கடத்திய பெண்ணுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில், வாஷிங்டன் அருகே வசித்தவர், பல்ராம் பாலோ மகராஜ். இவருடைய,மாஜி பெண் நண்பர் டோரின், 47. பல்ராம் மூலம் டோரினுக்கு, ஒரு குழந்தை உள்ளது.
தென் அமெரிக்க நாடான, டிரினிடாட் அண்ட் டுபாகோவை சேர்ந்தவர் டோரின். கடந்த, 2005ல், பல்ராம் கடத்தப்பட்டார். இவரை கடத்திய, 12 பேருக்கு, டோரின் உதவி செய்துள்ளார். டிரினிடாட் அண்ட் டுபாகோவுக்கு, பல்ராம் சென்ற செய்தியை கடத்தல்காரர்களுக்கு, டோரின் தெரிவித்துள்ளார்.
பல்ராமின் சொத்து விவரங்களையும், கடத்தல்காரர்களிடம், டோரின் தெரியப்படுத்தியுள்ளார். கடத்தல்காரர்களிடம் சிக்கிய, பல்ராம் இறந்து விட்டார். இதையடுத்து, டோரின் கைது செய்யப்பட்டார். கடத்தலுக்கு உதவியதை அவர் ஒப்புக்கொண்டார். கொலம்பியா மாவட்ட நீதிமன்றம், டோரினுக்கு, 20 ஆண்டுகள், சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
Average Rating