வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலையில் அதிநவீன தொழிநுட்பம்
Read Time:1 Minute, 27 Second
சிறைச்சாலைகளின் நடைமுறையில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைளை மேலும் வலுப்படுத்துவதற்கு சிறைச்சாலை திணைக்களத்தினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, வெலிக்கடை சிறைச்சாலையில் முதலில் அதிநவீன தொழிலுட்ப உபகரணங்கள் பொறுத்தப்படவுள்ளன.
இந்த நடவடிக்கை இந்த வாரத்தில் இடம்பெறும் என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
சிறைச்சாலையினுள் இடம்பெறும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன், வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலைக்குள்ளும் அதி நவீன தொழிநுட்பங்கள் பொறுத்தப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் 32 சிறைச்சாலைகள் காணப்படுகின்ற போதிலும் வெலிக்கடை சிறைச்சாலையிலேயே முதல் கட்டமாக இந்த அதி நவீன தொழிநுட்பங்கள் பொறுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating