முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரின் மனைவி தற்கொலை?
Read Time:1 Minute, 10 Second
முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீல் அங்கோலாவின் மனைவி பரீனிதி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
புனேயிலுள்ள அவரது தாயாரின் வீட்டில் பரீனிதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தற்கொலையாக இருக்கலாம் என இந்திய பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தற்கொலை செய்துகொண்டதாக குறிப்பிடப்படும் பரீனிதியின் கடிதமொன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அந்த கடிதத்தில் ‘தான் தனது வாழ்க்கையில் மிகவும் சோர்வடைந்து விட்டதாக’ குறிப்பிட்டுள்ளாராம் பரீனிதி.
46 வயதான பரீனிதி தனது தாயாருடன் புனே வீட்டில் வசித்து வந்ததோடு, சலீல் அங்கோலா, பரீனிதி தம்பதியினருக்கு 2 மகன்மார் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Average Rating