தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும்: அமெரிக்கவாழ் இந்தியர்கள் கோரிக்கை
வேலைக்கார பெண்ணுக்கு விசா பெறுவதில் தவறான தகவல் அளித்த புகாரில் கைதான பெண் தூதர் தேவயானியை கைவிலங்கு போட்டு அழைத்துச் சென்றதுடன், அவருடைய ஆடைகளை களைந்து சோதனை நடத்தியும், கிரிமினல் குற்றவாளிகளுடன் அவரை அடைத்து வைத்தும் அமெரிக்க போலீசார் அவமரியாதை செய்தனர்.
இந்நிலையில் தேவயானி மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு இணையதளம் வழியாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கவாழ் இந்தியர்கள் இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தேவயானியை கைது விவகாரம் அமெரிக்கவாழ் இந்தியர்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் நடவடிக்கையை எற்றுக் கொள்ள முடியாது. தேவையானியிடம் நடந்து கொண்ட விதம் விரோதப் போக்கில் செயல்படுவதாக உள்ளது. இது இரு நாட்டு உறவில் சிக்கலை ஏற்படுத்தும்.
எனவே தேவயானி மீதான வழக்கை திரும்ப பெற வேண்டும் என்று கூறியுள்ளனனர்.
Average Rating