நாணய தாள்களுடன் இருவர் கைது
Read Time:52 Second
4 லட்ச ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணய தாள்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாலி மற்றும் கெமேரோன் பிரஜைகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது கட்டுநாயக்க வானுர்தி தள செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து, அமெரிக்க டொலர்கள், சுவிஸ் பிரேங் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, கைது செய்யப்பட்டவர்கள் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating