இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்..

Read Time:1 Minute, 43 Second

Arrestingஇரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றும் போது பண நோட்டுகளாக, மாற்றமடையும் தாள்கள்; இரு ஆபிரிக்கர்கள் கட்டுநாயக்கவில் கைது-
சட்டவிரோதமாக வெளிநாடு ஒன்றிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகை பணத்துடன் இருவர் கட்டுநாயக விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலையில் காலை 4 மணியளவில் அபுதாபியிலிருந்து வந்த வெளிநாட்டவர் இருவர் தொடர்பில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து சுங்க அதிகாரிகள் அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்திய போதே இவை சிக்கின.

இவர்களிடமிருந்து பெருந்தொகையான அமெரிக்க டொலர்கள்; சுவிஸ் பிரேங்க் நோட்டுகளையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இப்பண நோட்டுக்கள் வெள்ளைநிற தாள்களைப் போல் காட்சி தந்ததாகவும் அத்தாளில் இரசாயனப் பொருள் ஒன்றை ஊற்றியவுடன் அவை பண நோட்டாக மாறியதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் ஆபிரிக்க நாட்டைச் சேர்ந்தவர்களாவர்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை கட்டுநாயக விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கருத்தடை செய்து கொண்ட இளம் தாய் மரணம்
Next post வருத்தப்படும் “ரொம்ப பிசி” நடிகர்!