தேசியகொடி விவகாரம்: ஆஸி பிரஜைக்கு அனுமதி மறுப்பு
Read Time:54 Second
இலங்கையின் தேசிய கொடியை தலைகீழாக பறக்கவிட்ட அவுஸ்திரேலிய பிரஜையான ஜெஃப்ரி டொப்ஸ் என்பவருக்கு இலங்கைக்குள் வருவதற்கு இன்று அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இவருக்கு இலங்கையிலும் வேறு நாடுகளிலும் பல ஆடம்பர ஹோட்டல்கள் சொந்தமாக உள்ளன.
பொதுநலவாய மாநாட்டிற்கு சற்று முன்னதாக இவர் காலியிலுள்ள தனது வீட்டின் முன்பாக சிங்ககொடிகள் நான்கை தலைகீழாக பறக்கவிட்டுள்ளார்.
இவர் விரும்பத்தகாத நபர். இவர் இலங்கைக்கு வருவரை நாம் அனுமதிக்க மாட்டோமென தென்மாகாண ஆளுநர் குமாரி பாலசூரிய கூறினார்.
Average Rating